Sunday 5th of May 2024 02:34:44 PM GMT

LANGUAGE - TAMIL
மருதங்கேணியில் 18 கிலோ கஞ்சா சிக்கியது!

மருதங்கேணியில் 18 கிலோ கஞ்சா சிக்கியது!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருங்கேணி பிரதேசத்தில் ஒழித்துவைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருள் மதுவரித்திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி மதுவரித்திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட மதுவரித்திணைக்களத்தினர் குறித்த போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

மதுவரித்திணைக்களத்தினர் அங்கு சென்றபோது அங்கிருந்த நபர் ஒருவர் தப்பி ஓட முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை அங்கிருந்த 18 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மதுவரித் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE